×

பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா?: மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க மாட்டார் என்று ஆளும் கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆளுங்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில் பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். கார்கே பேசியதை தொடர்ந்து கடும் முழக்கம் எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் எந்த விதியின் கீழ் விவாதம் நடத்துவது என்பதில் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

The post பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா?: மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Malligarjuna Karke ,Delhi ,Modi ,Paramathmaava ,PM ,Manipur ,Mallikarjuna Karke ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...